போகும் பயணம் தெரிந்து போவதில்லை ஈழப்போராட்ட களத்துக்கு செல்லும் வீரவேங்கைகள் .அப்படியானவர்களில் ஒருவன் தான் ரகுவும் என்பதால் அவள் பதிலுக்காக காத்திராமல் நடக்கத்தொடங்கினான்.

இனி எப்ப ரகு உங்களை பார்ப்பேன் மீண்டும் பார்ப்பேன் குறுந்தொகை பாடல் போல கார்காலத்திலா ??இப்பவாவது சொல்லுங்க ??என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று பீளீஸ்.

ஆனால் உங்களுக்காக எப்பவும் காத்து இருப்பேன் 16 வயதிலினிலே மயில் போல இனவாத யுத்தத்தில் இன்னுயிரை நீக்காவிட்டாள் என்று சற்று சத்தமாக சொன்னாள்.வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்று புலம்பெயர் தேசம் சர்வதேசத்திடம் கதறியது போல!

என்ன சொல்ல சொல்லுறீங்க சுகி??காதலுக்கு மரியாதை படத்தின் இறுதிக்காட்சி போல என் அம்மாவையும் ,அப்பாவையும் வந்து உன்னை எனக்கு கட்டிவையுங்க. இவள் எங்க வீட்டு இராசத்திபோல நாங்க பார்த்துக்கொள்வோம் என்றா?

இல்லை விவசாயி நாங்கள் என்றாலும் வீதியில் விடமாட்டோம் எங்க வீட்டுக்கு வந்த மருமகளை என்று விராப்புடன் சம்பந்தம் பேசச் சொல்லுறீங்களா???

இல்லை உங்க அப்பாவின் அதிகார மையம் புரியாமல் நீ என்னை நேசிப்பதையும் !அதனால் வரும் பின்விளைவுகளையும் புரியாதவன் போல நடந்துக்கவா ?

காதலே நிம்மதி பட சூர்யா போல சுகி?? 

இனவாத ஆட்சி உங்க அப்பாவைக்கூட இந்த ஊரில் இருந்து ,இந்த உலகத்தில் இருந்து குண்டுவைத்து என்றாலும் கொலை கங்கணம் கட்டும் நிலையில் அவர் உயிரைக்காக்க உறங்காத கண்மணிகள் புலனாய்வில் இருப்பார்கள் .அவர் குடும்பத்து பெண் நீ.

இந்த நிலையில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் எத்தனை குறுஞ்செய்தி செல்போல கூவிக்கொண்டு போகும் என்று யார் அறிவார் ??

இது எல்லாம் ஜோசிக்காமல் நீ அழுதுவது தான் எனக்கு வியப்பாக இருக்கு!இல்லை நீ என்னை நேசிப்பதை அறிந்துவிட்டு உன் அப்பாவின் அதிகார மையத்துடன் மோதவா??

சினிமா ஹீரோ போல பஞ்சு வசனம் பேசவா?? கதிர் அறுக்கத் தெரிந்தவனுக்கு கழுத்தும் அறுக்கத் தெரியும் கட்டி வையுங்க உங்க பெண்னை என்றா ?

இது எல்லாம் பேச நல்லா இருக்கும் .ஆனால் எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை.

பேச்சு வார்த்தை மேசைக்கு என்று வந்து விட்டு இப்ப இனவாதம் பேச்சை முறித்துக்கொண்டு முன்னேறும் இந்த செயல் போல இல்லை நம் வாழ்க்கை!

வெற்றிகொள்வோம் என்ற எண்ணத்தில் முன்னெடுப்பு செய்தால் வீழ்ந்து போவது அப்பாவி மக்கள் போல என் குடும்ப உறவுகள் தான்.

இப்படி ஆகுவதை விட மெளனம் பேசியதே படத்தில் வருவது போல விட்டுவிடுவோம் இந்த காதல் என்ற வார்த்தையே பிடிக்கல உன்னையும் சேர்த்துத்தான் நீ என் முன்னே அழுது புலம்பும் நிலையை என்னால் பார்த்து சகிக்க முடியாது . என்றுவிட்டு! ரகு திரும்பி அவளை ஒரு முறை பார்த்தான் .!!
அவள் கண்களில் இருந்து கண்ணீர் மண்ணில் விழுந்துகொண்டு இருந்தது.நாளை நான் என் மண்ணில் வீழ்ந்தாலும் எனக்கான கண்ணீரை இவள் இப்பவே சிந்துகின்றாள் என்று நினைத்துக்கொண்டு ரகு திருபிப்பார்க்காமல் வேகமாக நடக்கத்தொடங்கினான்.!!

கண்ணில் வலிதந்து கடந்து போகின்றவனே
காதலியின் நினைவு துறந்துபோவாயோ
களத்தில் களிரு போல கட்டளை ஏற்று
கலிங்கத்துப்பரணி பாடுவாயோ
கடும்சமர் என்று களப்பலியாகி
கந்தகக்காற்றில் கலந்து போவாயோ
காலம் எல்லாம் இதயக் கமலம் ஆவாயோ
காத்து இருப்பேன் கண்ணன் வருவான்
என்ற ராதை போல!
( சுகியின் குறிப்பில் இருந்து.)

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book