ஈழம் விட்டு புலம்பெயர்ந்த் பின் மனதில் இருக்கும் துயரங்களை பலர் பொதுவெளி சொல்லி தம் கடந்த கால வேதனைகளை பகிர நினைப்பது இல்லை என்பதை புலம்பெயர்ந்த் பின் தனிமரம் கற்ற பாடம் ஆனால் எழுத்து ஆர்வம் என்னையும் தனிமரம் வலையில் தொடர் எழுதத்தூண்டியது என் ஆத்ம திருப்தியன்றி வேற நோக்கம் இல்லை ! சில தொடர் தனிமரம் வலையில் முன்னர் எழுதிய போது என்னை நேசிக்கும் இன்னொரு ஈழத்து பிரபல்ய பதிவர் என்னிடம் இந்திய தேசத்தில் மீண்டும் நேரடியாக கூறிய விடயம் இன்னும் பலரிடம் செல்ல ஒரு தொடர் எழுதுவோம் என்ற போது இனவாத நாட்டில் இணையத்தில் எழுதமுடியாதநிலையில் தனிமரம் வலையில் எழுதிய தொடர்கதைதான் விழியில் வலிதந்தவனே!

ரகு. சுகி இருவரும் என்னை தனிமையில் அறிந்தவர்கள் தாய் தேசத்தில் ! ஆனாலும் போர் காலத்தின் கோலம் இன்று எல்லாம் உணர்வுகள் தீண்டாத ஓவியம் போல சித்றியநிலையில் முன்னர் தனிமரம் வ்லையில் எழுதியதை மீண்டும் ஒரு ஆவண்ம்போல இந்த் மின்நூல்வடிவில் உங்க்ளிடம் பகிர்கின்றேன். ஈழ அச்சு ஊடகம் சொல்லாத சேதிகள் உங்களை எழுதுவடிவில் சேர்ந்தால் அதுவே என் மன ஆறுதல்! இந்த மின்நூல் முயற்ச்சிக்கு தன் முழுமையான ஆதரவும் .அன்பும் காட்டும் மரியாதைக்குரிய சீனிவாசன் அவர்களுக்கும். அவர்குழுவுக்கும் என் நன்றிகளும். வாழ்த்துக்களும்.

இப்படிக்கு
தனிமரம் நேசன்
பாரிஸ்!

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book