வணக்கம் உறவுகளே .
 மீண்டும் சிறிய விடுமுறையின் பின் தனிமரம் இணையத்தின் ஊடே உங்களுடன் இணைகின்றது.
மூன்றாவது ஆண்டின் வலைப்பயண ஆரம்பத்தில் மீண்டும் ஒரு குறுந் தொடரினை உங்களிடம் பகிர்கின்றேன்.
வலையுலகில் தொடருக்கான ஆதரவு மிகவும் குறைவு என்பது என் கடந்தகால நேரடி அனுபவம்
.என்றாலும் ஒவ்வொரு தொடரும்  வலையுலக உறவுகளினால் வலைச்சரத்தில் வலம் வருவதே  எனக்கு கிடைக்கும் அங்கிகாரம் ஒரு புறம் என்றால் !

இன்னொன்று தொடரின்   மூலம் நான் அடையும் ஆத்ம திருப்தி  பெரிது  . அதனால் தான் இணையத்தில் என் நேரத்தினை செலவிடுகின்றேன்.

இந்தத்தொடர் /
என் கடந்தகாலத்தில் தாயகத்தின் வன்னி நிலப்பரப்பில் விற்பனைப்பிரதிநிதி வேலையும் ,அதனுடன் இணைந்த வியாபார விளம்பர சேமிப்பும் , என்னைப்  பல்வேறு நபர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை  பெற்றதன் விளைவும்   அப்படிப் பழகியவர்களில் பள்ளி மாணவர்களும் மாணவர்த்தலைவர்களும் அடக்கம்.
என்னுடன் நெருங்கிப்பழகிய ஒரு மாணவத்தலைவன் கதை தான் இது.
இந்த வாய்ப்பினை எனக்கு சமாதான காலம் தந்தது.2002 இல் A–9 திறப்பும்  அந்த அந்த பயணத்தில் பழகிய ரகுவின் நட்பினை நான்  பின் பிரிந்து இனவாத அடக்குமுறையினால் .
என்றாலும்  மீண்டும் ஒரு நாள் என் ஆன்மீகப் பயணத்தில் சென்னையில் சந்தித்தேன்  .அந்த நட்பினை  அதன் பின் சிந்தித்தேன் .
இனி ரகுவுடன் உங்களைப் பயணிக்க எழுத்தாணியாக மட்டும் தனிமரம் பிடித்த பாடல்களுடன் இந்தத்தொடரில் பயணிக்கும்.
வழமைபோல இந்தத் தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை .
இது ஒரு சாமானிய வழிப்போக்கனின் உன்னதமான உணர்வு யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.
 என்றாவது ஒருநாள் மீண்டும் வன்னி மண்ணில் சிலரைச் சந்திக்கும் ஆவலுடன் ,ஆசையுடன்  ,புலம்பெயர் தேசத்தில் இருந்து .
சுதந்திரக் காற்றினை அன்னை பூமியில் சுவாசிக்க காத்து இருக்கும் ஒரு ஏதிலியின் எதிர் பார்ப்புக்களுடன் இந்தத்தொடரினை ஏற்றிவிடுகின்றேன் தனிமரம் வலையில் .உங்களுடன் கதை பேசும் ஆசையில்.:))).

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

விழியில் வலி தந்தவனே Copyright © 2015 by தனிமரம் நேசன் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book